2006/03/21

அதிதி தேவோ பவ!

அதிதி தேவோ பவ - இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? விருந்தினர் அனைவரும் கடவுளுக்கு சமம் என்பது பொருள். இதுவே நமது இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் புது விளம்பரத்தின் தாரக மந்திரம்.

இப்போது வரும் புது விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? யாராவது ஒரு வெளிநாட்டுப் பயணி, ஒரு ஏஜென்ட்டால் தொந்தரவு செய்யப்படுவது போலவும், இந்தியக் குடிமகன் ஒருவர் அவருக்கு உதவுவது போலவும் இந்த விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. இத்தனை நாட்கள் இவர்கள் தூங்கி விட்டு, இப்போதாவது விழித்துக்கொண்டார்களே எனத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு சுற்றுலாத்தளங்களிலும் சுற்றுலாப்பயணிகள் படும் அவதிகள் சொல்லி மாளாது.

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் படும் பாடு, அவர்களை மறுபடியும் இந்தியாவிற்கு வர வைக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வி.

இந்த மாதிரி, வெறும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டுமே தொந்தரவு என்பது உண்மையல்ல என்பது ஏதாவது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்திற்கு சென்ற அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மாதிரி பாகுபாடுகள் தான் நமது சில்லறை ஏஜென்டுகளுக்கு கிடையாதே?

ஏஜென்டுகள் மட்டுமா? ஆட்டோ ஓட்டுனர்கள், வாடகைக்கார் ஓட்டுனர்கள், விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள் என எத்தனையோ பேர் இந்த மாதிரி தொல்லை கொடுப்பவர்களில் அடக்கம்.

ஒருமுறை ஊட்டிக்கு பயணம் செய்த போது, நான் பதிவு செய்த விடுதியில் இருந்து வண்டி அனுப்பவதாக சொல்லியிருந்தார்கள் - ஆனால், அனுப்பவில்லை. எனவே வெளியே வந்து அவர்களுக்கு தொலைபேசியில் விவரம் சொல்லிக் காத்திருந்தபோது, ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்னை அணுகினார். அவரிடம் எனக்கு ஆட்டோ வேண்டாம் எனவும், விடுதியின் வண்டிக்காக காத்திருப்பதாகவும் பணிவுடன் சொன்னேன்.

அதற்கு அவர், அந்த விடுதி (Sterling Resorts!) கண்டிப்பாக வண்டி அனுப்பது எனவும் காத்திருப்பது வீண் எனவும் 'வாழ்த்துரை' வழங்கினார். நான் சொன்னேன் - அவ்வாறு வரவில்லையெனில், நான் நடந்தே செல்வேன், கண்டிப்பாக அவரது ஆட்டோவில் ஏற மாட்டேன் என்று. 10 நிமிடத்திற்குள்ளாக அந்த வண்டி வந்தது. அவரது வாழ்த்துரை பலிக்கவும் இல்லை, அவரது கணிப்பு ஒரு உண்மையுமில்லை!

இந்த மாதிரி ஒவ்வொருவரும் ஏதாவது விதத்தில் ஒரு கசப்பான அனுபவம் இருக்கும். இந்திய சுற்றுலாத்துறை இந்த மாதிரி ஏஜென்டுகளை மற்றும் குறி வைக்காமல், இந்தியர் அனைவருடைய மனநிலையில் மாற்றம் வரவைக்கவேண்டும். அப்படி செய்தால், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் எந்த வித தடையுமின்றி அடிக்கடி இந்தியா வருவார்கள்.

பார்க்கலாம் இந்த விளம்பரங்கள் எத்தனை தூரம் இந்தியர்களை சென்றடைகின்றன என்று!

2 Comments:

At 4:20 PM, March 21, 2006, Blogger Geetha Sambasivam said...

Ithe vilambaram BJP rule cheyyumbothu vanthirunthal ellarum Tourism dept. Kavi aga mari vittathu enbarkal. Ippothu?Athithi Devo Bava!

 
At 4:30 PM, March 23, 2006, Blogger Dubukku said...

I have linked this in Desipundit.
http://www.desipundit.com/2006/03/23/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b5/

 

Post a Comment

<< Home