2006/04/18

6 & 20 வருடங்களுக்குப் பிறகு….

இன்று அபு தாபியில், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பந்தயம். தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா? இருக்கிறது.


முதலில் 6 வருடம்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஆறு வருடங்களுக்குப் பிறகு ஒரு பொதுவான இடத்தில் மோதுகின்றன. இது ஐக்கிய ராச்சியத்தில் ஷார்ஜாவிற்குப்பிறகு 2ஆவது இடம். சாயது கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச பந்தயமும் இதுவே.


ஷார்ஜா மைதானம் & சாயது மைதானம்














இதற்கு முன் 2000 ஆண்டில் தான் இந்திய பாகிஸ்தான் அணிகள் ஒரு பொதுவான இடத்தில் விளையாண்டன. அசாருதீன் விஷயம் வெளி வந்தவுடன், ஷார்ஜாவில் இந்தியா விளையாடுவதை இந்தியக் கிரிக்கெட் வாரியம் விரும்ப வில்லை. அதற்கப்புறம், அரசியலின் தலையீட்டால் இரண்டு அணிகளும் விளையாடாமலேயே இருந்தன. இப்போது மிக அதிகமாக விளையாடுகிறார்களோ என எண்ணத்தோன்றுமளவிற்கு விளையாடுகிறார்கள்.

எனினும் இன்றைய ஆட்டம் ஒரு நல்ல விஷயத்திற்காகவே. இதனால் திரட்டப்படும் நிதி, சென்ற ஆண்டு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதனால் ஒரு பத்து மில்லியன் டாலர் வரை வசூலிக்க முடியும் என நடத்துபவர்கள் நம்புகிறார்கள். டிக்கெட் விலை குறைந்தது 50 திர்ராமிலிருந்து 2000 தி. வரை வைத்திருக்கிறார்கள். (ஒரு தி. = ரூ. 12). (அதனால் மட்டும் போகாமல் இல்லை, கடமை அழைப்பதாலும் தான்!),

சாயது கிரிக்கெட் மைதானம் பல்வேறு நவீன வசதிகளைக்கொண்டதாம். டிவி ஒளிபரப்பிற்காக விசேஷ ஒளி வசதிகள் கொண்டதாகவும், புல்வெளி ஈரப்பதத்தினை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையும் கொண்டதாம். பார்க்கலாம் எப்படி என!

20 வருடங்களுக்கு முன்பு!

அது என்னவென்று தெரியாத கிரிக்கெட் ரசிக்கர்களே இருக்க முடியாது. என்ன, சரியான தேதி மறந்திருப்பார்கள். இன்று தான், 20 வருடங்களுக்கு முன் - சேத்தன் ஷர்மா வீசிய கடைசிப்பந்தில் 6 அடித்து, இந்திய கிரிக்கெட்டின் ஷார்ஜா 'ராசி'யை உருவாக்கினார் ஜாவித் மியான்டட்.

இன்று அதே நாளில் இந்தியாவின் தோனி (அல்லது வேறு யாராவது?) பாகிஸ்தானின் பந்து வீச்சை நொறுக்குவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!



பி.கு. - தேவ், என் வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேனப்பா!

4 Comments:

At 12:37 PM, April 18, 2006, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

நல்ல தகவல்கள் கொடுத்தீர்கள் நண்பா..வாழ்த்துக்கள்..

 
At 12:41 PM, April 18, 2006, Blogger Unknown said...

நன்றி துபாய் நண்பரே.
அட நீங்க கொடுத்த வாக்கைக் காப்பாத்தீட்டீங்க இல்லன்னா நம்ம சங்கம் சார்பா தல கிட்ட சொல்லி உங்களுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கியிருப்போம் என்னப் பண்ணுறது?

 
At 2:00 PM, April 18, 2006, Blogger Geetha Sambasivam said...

சங்கத்துக்காக உண்மையாக உழைக்கும் தியாகி தேவ் வாழ்க வளர்க. (மகளிர் அணித் தலைவி நான் தான்னு அப்படியாவது ஒத்துக்க மாட்டீங்களா என்ன?) இந்த சம்மருக்கு இந்த ice தேவைதானே.

 
At 2:34 PM, April 18, 2006, Blogger Unknown said...

தேர்தல் தொந்தரவு தாங்க முடியாமத்தான் இத்தனை நாள் எந்தப் பதிவும் போடாமல் இருந்தேன். விளையாட்டு பத்தி போட்டாக் கூட இந்த தேர்தல் ஜுரம் யாரையும் விட மாட்டேங்குதே?

கீதா மேடம், நீங்க பேசாம கொ.ப.செ. வா போகலாம். அதுக்குத் தான் நிறைய 'வருங்காலம்' இருக்கு.

நிலவு நண்பனே, தனியாக எந்தக் கட்சி பாரபட்சமும் இன்றி பின்னூட்டமிட்டத்ற்கு நன்றிகள் பல!

 

Post a Comment

<< Home